Skip to main content

பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது!

Oct 12, 2020 290 views Posted By : YarlSri TV
Image

பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது! 

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. லத்தின் அமெரிக்க நாடுகளில் அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளை கொண்ட முதல் நாடாகவும் பிரேசில் உள்ளது.



இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக பிரேசிலில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. அங்கு தினசரி கொரோனா உயிரிழப்பு 500-க்கும் அதிகமாக இருந்து வருகிறது.



அதன்படி நேற்று அங்கு ஒரே நாளில் 559 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது.



அதேபோல் புதிதாக 26 ஆயிரத்து 749 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதன் மூலம் மொத்த பாதிப்பு 50 லட்சத்து 82 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை