Skip to main content

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை!

Oct 11, 2020 256 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை! 

கொரோனா தொற்று அச்ச நிலைமையிலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்றைய புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்துள்ளது யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பரீட்சை நிலையங்களிலும் 99% மான வருகை காணப்பட்டதாகவும் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது



பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சை வினாத்தாள் இலகுவாக இருந்ததாக கருத்து தெரிவித்தார்கள் அத்தோடு பெற்றோர்கள் குறித்த இக்கட்டான சூழ்நிலையிலும் பரீட்சியை நடத்தியதனால்  அரசிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்



யாழ்ப்பாண மாவட்டத்தில்8410 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் தோற்றியிருந்தனர்



யாழ் மாவட்டத்தில் 2020 புலமைப் பரிசில் பரீட்சையில் தீவகம் யாழ்ப்பாணம் தென்மராட்சி வலயத்திலு 3540மாணவர்களும்  வடமராட்சி ,வலிகாமம் வலயத்தில் 4870,மாணவர்களும்  பரீட்சைக்கு தோற்றினர் 



94 பரீட்சை நிலையங்களில்  22இணைப்பு நிலையங்களின் கீழ்     பரீட்சைகள் ஆரம்பமாகி இடம்பெற்றது. சுகாதார நடைமுறைக்கு அமைவாக பரீட்சை மண்டபங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதோடு



மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி சமூக இடைவெளி பேணி  முக கவசம் அணிந்து பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்டது



இன்று  இடம்பெறும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதோடு  212 பரீட்சை மண்டபங்களில் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கத


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை