Skip to main content

பாடசாலை மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு!

Oct 10, 2020 248 views Posted By : YarlSri TV
Image

பாடசாலை மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு! 

காதலுடன் தொலைபேசியில் உரையாடுவதனை கண்டித்ததனால் மன உலைச்சலுக்கு உள்ளான மாணவி அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்தார். தருமபுரம் மகாவித்தியலாயத்தில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 8ம் திகதி  மேற்படி யுவதி தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்துள்ளார். இதனை அவதானித்த உறவினர் தொலைபேசியினை பறித்தெடுத்துள்ளதுடன், கடுமையாக கண்டித்துள்ளார். மனமுடைந்த யுவதி நேற்று ஓரு வகை மருந்துகளை உட்கெண்டுள்ளார். வாந்தி எடுத்ததனை அவதானித்த உறவினர் யுவதியினை எடுத்து சென்று தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் இன்று அதிகாலை யுவதி உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடிர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை