Skip to main content

தலித் பெண் பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

Oct 06, 2020 244 views Posted By : YarlSri TV
Image

தலித் பெண் பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்! 

உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்ற ராகுல்காந்தியை காவல்துறை தாக்கியதை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.



ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மூலப்பாளையத்தில் நடந்த ஆர்பாட்டத்தில், மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற சத்தியாகிர போராட்டத்தில், மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.



சமூக விரோதிகளால் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவம், பாதிக்கப்பட்ட வீட்டுக்குச் சென்ற ராகுல்காந்தி . பிரியங்கா காந்தி ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவங்களை கண்டிக்கும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தி , முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை