Skip to main content

பாலியல் வன்கொடுமை- மாணவர்கள் நூதன ஆர்ப்பாட்டம்!

Oct 06, 2020 275 views Posted By : YarlSri TV
Image

பாலியல் வன்கொடுமை- மாணவர்கள் நூதன ஆர்ப்பாட்டம்! 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கண்டித்து தஞ்சையில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள் உடலில் முள் செடிகள் மற்றும் இரும்பு உடை அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை கண்டித்தும், உத்தரபிரதேசத்தில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது மாணவர்கள் இரும்பிலான ஆடைகளை அணிந்தும், முள் செடியை உடலில் சுற்றியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை