Skip to main content

கட்டாய திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்!

Oct 05, 2020 276 views Posted By : YarlSri TV
Image

கட்டாய திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்! 

கட்டாய திருமணம் செய்ததுடன், சொத்துகளை அபகரிக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்மபுரி எஸ்.பி அலுவலகத்தில் கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளார்.



தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கடைமடை அடுத்த நேரு வீதியை சேர்ந்த குமார் – தொட்டியம்மாள் தம்பதியின் மகள் லட்சுமி (22). இவர் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.



அத மனுவில், ‘நான் தர்மபுரியில் செயல்படும் தனியார் கல்லூரியில் எம்,காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். என் தாயார் சமீபத்தில் எனக்கு திருமண ஏற்பாடு செய்தார். படிப்பு முடித்து வேலைக்கு சென்ற பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினேன்.



ஆனாலும், கடைமடை பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர், தற்போதைய தலைவர் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்.



இதையடுத்து, கடந்த மாதம் 23 ஆம் தேதி, கிருஷ்ணகிரி பெரியமுத்தூர் முருகன் கோயிலில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணனின் தம்பி சண்முகத்தின் மகன் சக்திவேல் எனக்கு கட்டாய தாலி கட்டினார்.



அன்று முதல் சக்திவேல் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சிக்கிறார். மேலும், என் பெயரிலும், என் தாயார் பெயரிலும் உள்ள வீடு மற்றும் சொத்துகளை சக்திவேல் பெயரில் மாற்றி எழுதித் தருமாறும் சக்திவேல் குடும்பத்தினர் கொடுமை செய்கின்றனர்.



எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ’எனது சுதந்திர வாழ்க்கைக்கு வழிவகை செய்து தர வேண்டும்’ என்று லட்சுமி கோரிக்கை வைத்துள்ளார். கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக இளம் பெண் ஒருவர் பெற்றோர் மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை