சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரித்து வருவதாக சென்னை மாநகரட்சி தெரிவித்துள்ளது!
Oct 05, 2020 287 views Posted By : YarlSri TV
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரித்து வருவதாக சென்னை மாநகரட்சி தெரிவித்துள்ளது!
தமிழகத்தின் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். உயிர் பிழைத்துக் கொள்ள சென்னைவாசிகள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்த சம்பவங்கள் ஏராளம். தலைநகர் கொரோனாவில் இருந்து மீளுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்த நிலையில் வீடுதோறும் பரிசோதனை, நடமாடும் மருத்துவ முகாம்கள் என சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் குறைந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்து வந்தது. அதாவது கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 10க்கும் கீழ் இருப்பதாகவும், விரைவில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லாத சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் 36 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூரில் 16 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்து சேவை, மால்கள் திறப்பு, மெட்ரோ ரயில்கள் இயக்கம் உள்ளிட்ட காரணங்களாலேயே சென்னையில் கொரோனா மீண்டும் தலைதூக்குவதாகவும் இதனை கருத்தில் கொண்டே புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி வழங்காமல் இருப்பதாகவும் தெரிகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago