தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு புதிய கிரெடிட் கார்டு கடன் திட்டத்தை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது!
Oct 05, 2020 229 views Posted By : YarlSri TV
தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு புதிய கிரெடிட் கார்டு கடன் திட்டத்தை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது!
தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய வட்டி கொண்ட புதிய கிசான் கிரெடிட் கார்டு கடன் திட்டத்தை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது
இது தொடர்பாக இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த புதிய கடன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள மீனவர்கள், 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. இந்த கடன் தொகைக்கு வட்டி மானியம் வழங்குவதாகவும் அது அறிவித்துள்ளது.
அதாவது, கடன் தொகைக்கு 7 சதவீத வட்டி விதிக்கப்படுவதாகவும், அதே சமயம் அந்த கடனை, ஒரு ஆண்டிற்குள் திருப்பி செலுத்துவோருக்கு 3 சதவீதம் வட்டி மானியம் வழங்குவதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த கடன் திட்டத்தில், கடன் வாங்கும் தமிழக மீனவர்களுக்கு ரூபே கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடனை பெற விரும்பும் தமிழக மீனவர்கள், அதற்கான விண்ணப்பத்தை தமிழக மீன்வள துறையின் மூலம் சமர்பிக்க வேண்டும் என்றும் அத்துடன், விசைப்படகு குறித்த தகவலையும் குறிப்பிட்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்தியன் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
20 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
20 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
20 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago