சாவகச்சேரி பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்!
Oct 07, 2020 219 views Posted By : YarlSri TV
சாவகச்சேரி பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சாவகச்சேரி பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோணா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் தற்போது கொரோணா சமூகத்தொற்று தொடர்பில் யாழ் மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது
எனினும் தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு தொடர்பிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்றும் அதிகரிக்குமாயின் யாழ் மாவட்டத்தில் அபாயநிலை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு தொற்றால் பாதிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றது
கோரணா தொற்று தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது டெங்கு ஒழிப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவே சாவகச்சேரி பொது வைத்திய அதிகாரி ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலர் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்து மாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago