Skip to main content

பச்சை நிறத்தில் மாறிய கடல்’ மீன்கள் உயிரிழக்கும் அபாயம்!

Oct 02, 2020 234 views Posted By : YarlSri TV
Image

பச்சை நிறத்தில் மாறிய கடல்’ மீன்கள் உயிரிழக்கும் அபாயம்! 

ராமேஸ்வரம் அருகே இருக்கும் மன்னார் வளைகுடா கடலின் ஒரு பகுதி பச்சை நிறத்தில் மாறியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரையில் இந்திய எல்லையில் அமைந்திருக்கிறது மன்னார் வளைகுடா. இந்த கடலில் மிகவும் அரிய வகை மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இருக்கின்றன. ராமேஸ்வர மீனவர்கள் பெரும்பாலும் இப்பகுதியில் தான் மீன் பிடிப்பார்கள். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இக்கடலின் மண்டபம் முதல் வேதாளை வரையில் பூங்கோரைப் பாசிகள் எனப்படும் பச்சை நிறப்பாசிகள் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியிருக்கின்றன.



இதனால் பாம்பன் முதல் வேதாளை வரையில் திடீரென பச்சை நிறத்தில் கடல் நீர் மாறியதோடு, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தஅப்பகுதி மீனவர்கள், மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், அப்பகுதியில் கடல் நீரை ஆய்வு செய்த அதிகாரிகள் இது வழக்கமானது தான் என மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.



அதாவது, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பூங்கோரை எனப்படும் பாசி அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்குவதால் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறி விடுகிறது என்றும் இந்த பாசிகள் மீன்களின் செதில்களை அடைத்து அவற்றை சுவாசிக்க முடியாமல் உயிரிழக்க செய்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு வாரங்களில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவித்த அதிகாரிகள், அந்த பாசிகளில் விஷத்தன்மை ஏதும் இல்லை என்றும் இறந்த மீன்களை மக்கள் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் வராது என்றும் தெரிவித்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை