Skip to main content

இன்று காந்தி ஜெயந்தியையொட்டி முதல்வரும் துணை முதல்வரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்!

Oct 02, 2020 277 views Posted By : YarlSri TV
Image

இன்று காந்தி ஜெயந்தியையொட்டி முதல்வரும் துணை முதல்வரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்! 

மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் காந்தி ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.



முதல்வர் பழனிசாமி, ” அறவழியில் போராடி சுதந்திரம் பெற்று அகிம்சையின் மகத்துவத்தையும், சிறப்பையும் உலகறியச் செய்த அண்ணல் காந்தியடிகளின் 152-வது பிறந்த தினத்தில் மகாத்மா அவர்களை போற்றி வணங்கி மகிழ்கிறேன். #GandhiJayanti” எனக் குறிப்பிடப்பிட்டுள்ளார்.



மேலும் துணை முதல்வர் ஓபிஎஸ், ” அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி அறவழியில் போராடி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான இந்நன்னாளில், அண்ணல் காந்தியடிகள் அவர்களின் தியாகங்களையும் நாட்டுப் பற்றையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன். அன்பால் அனனவரையும் வழிநடத்துவோம். #GandhiJayanti” எனக் குறிப்பிட்டுள்ளார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை