ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது - தினேஷ் குணவர்தன
Oct 03, 2020 237 views Posted By : YarlSri TV
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது - தினேஷ் குணவர்தன
நாட்டின் சமூக – பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதிலும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தி பெண்களை வலுவூட்டுவதிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார்.
இணையவழி ஊடாக நடைபெற்ற பெண்கள் தொடர்பான நான்காம் உலக நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த 1995 ஆம் ஆண்டில் பெண்கள் தொடர்பான நான்காம் உலக நாடுகளின் மாநாட்டில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட பீஜிங் பிரகடனம், 25 வருடங்கள் கடந்த பின்னர் இப்போது பெண்கள் முன்னேற்றம், பாலின சமத்துவம் ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான முக்கிய வழிகாட்டியாக இருக்கின்றது.
பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கும் பெண்களை ஊக்குவிப்பதற்கும் உலகலாவிய ரீதியில் குறிப்பிடத்தக்க பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் கூட சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான பெண்களின் முன்னேற்றத்திற்கு அநேக காரணிகள் சவாலாக உள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டின் சமூக – பொருளாதார அபிவிருத்திக்கு பெண்களின் பங்களிப்பு பெறப்படுவதை உறுதி செய்வதற்கும் பெண்களை ஊக்குவித்தல் மற்றும் ஆண் – பெண் சமத்துவத்தை ஏற்படுத்தல் என்பவற்றிலும் இலங்கை தொடர்ந்தும் அக்கறையுடனேயே செயற்பட்டு வந்திருக்கின்றது.
எமது நாட்டில் 1931 ஆம் ஆண்டிலிருந்தே பெண்களுக்கு வாக்களிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டது. அதேபோன்று 1960 ஆம் ஆண்டில் உலகின் முதலாவது பெண் பிரதமரையும் இலங்கையே உருவாக்கியது. பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றம், அமைச்சுக்களின் செயலகங்கள், இராஜதந்திரப் பதவிகள் மற்றும் நீதித்துறை ஆகியவற்றிலும் பெண்கள் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்திருக்கிறார்கள். அது மாத்திரமன்றி நாட்டின் தொழிற்படையிலும் 34.5 சதவீதமானோர் பெண்களாக இருக்கின்றனர்.
இலங்கை ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம், பாலின சமத்துவத்தை ஏற்படுத்தல் மற்றும் நிறைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளல் ஆகியவற்றில் பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது.
எமது அரசாங்கத்தின் கொள்கையின்படி சமூக, பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பினை உறுதிசெய்தல் மற்றும் சுயமாகவே தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவர்களை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
21 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
21 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
21 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
21 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
21 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
21 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago