ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் – கே.என் நேரு சாமி தரிசனம்!
Oct 03, 2020 251 views Posted By : YarlSri TV
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் – கே.என் நேரு சாமி தரிசனம்!
ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் பெருமாளுக்கு சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது, புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும், இந்நாளில் பெருமாளை தரிசனம் செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்ற ஐதிகமாக பார்க்கப்படுகிறது.
அதன்படி இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை இன்று பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் 108 வைணவத் தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இலவச மற்றும் கட்டண தரிசனம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களும் தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் டோக்கன் பெற்று நம் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று, காலை திமுக முதன்மை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே. என். நேரு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்து மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை தரிசனம் செய்தார். பின்னர் ரெங்க நாச்சியாரை தரிசனம் செய்து விட்டு சென்றார். முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த கே. என். நேருவுக்கு கோவில் சுந்தர் பட்டர் வரவேற்பு அளித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago