Skip to main content

பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஓபிஎஸ்

Sep 27, 2020 323 views Posted By : YarlSri TV
Image

பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஓபிஎஸ்  

பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதியளித்துள்ளார்.



திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு காவி பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.



இந்நிலையில் இதுகுறித்து துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை