மட்டக்களப்பை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ.செல்லத்துரை கடலில் மூழ்கி உயிரிழப்பு!
Sep 30, 2020 226 views Posted By : YarlSri TV
மட்டக்களப்பை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ.செல்லத்துரை கடலில் மூழ்கி உயிரிழப்பு!
மட்டக்களப்பு சந்திவெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ.செல்லத்துரை (55 வயது ) என்பவரே நாவத்தை சின்னவெம்பு கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வழக்கம்போல் நேற்று (29) நண்பகல் கரைவலைத் தொழிலுக்குச் சென்ற வேளை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, கல்குடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கரைவலைத் தொழிலுக்கு பெரும்பாலும் குறித்த பிரதேசத்தில் உழவு இயந்திரமே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரைவலையை இழுக்கும்போது, உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்ட கயிறு அறுந்து சென்ற நிலையில், அதனை மீண்டும் உழவு இயந்திரத்தில் இணைக்கும் முகமாக கடலில் இருந்து எடுக்கச்சென்ற வேளை குறித்த மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago