பதாகை ஏந்தி வந்து போலீசில் சரண் அடைந்த குற்றவாளி!
Sep 28, 2020 218 views Posted By : YarlSri TV
பதாகை ஏந்தி வந்து போலீசில் சரண் அடைந்த குற்றவாளி!
உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. சமூக விரோத செயல்கள் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடும் பல்வேறு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பால் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், நேற்று நகாசா போலீஸ் நிலையத்திற்கு திடீரென வந்து சரண் அடைந்தார். அப்போது அவர் தனது கழுத்தில் பதாகை ஒன்றை கட்டியிருந்தார். அதில், ‘நான் குற்றவாளி, சரண் அடைகிறேன், என்னை சுட்டுவிடாதீர்கள்’ என எழுதப்பட்டிருந்தது.
அவர், அதிகாரிகள் முன்பு மண்டியிட்டு சரண் அடைந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைத்தங்களில் வேகமாக பரவி வருகிறது.
போலீசார் என்கவுண்டரில் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் அந்த குற்றவாளி சரண் அடைந்துள்ளார். அவரை பிடித்துக் கொடுத்தால் 15000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சரண் அடைந்த நபர் தற்போது போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார். உரிய சட்ட நடைமுறைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago