வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து திருச்சியில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
Sep 28, 2020 225 views Posted By : YarlSri TV
வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து திருச்சியில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து திருச்சியில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக முதன்மை செயலாளர் கே. என். நேரு , அந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே , கே. என். நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கே.என். நேரு, மத்திய மாநில அரசுகளின் ஊக்கத்தொகையும், குறைந்தபட்ச ஆதார விலையும் விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பாக இருந்து வந்தது. அதனை மாற்றி
விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் புதிய வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களே இருக்காது என்றும், விளை பொருளுக்கு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைதான் கிடைக்கும் என்றும் கூறினார். விவசாயிகளை பாதிக்கும் இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் கே.என்.நேரு வலியுறுத்தினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago