எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்
Sep 24, 2020 236 views Posted By : YarlSri TV
எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்
தங்களது வீட்டில் தனிமைப்படுத்துதல் போஸ்டர் ஒட்டுவதில் எந்த பிரச்னையும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரான விஜயகாந்திற்கு கொரோனா உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்தில் தனிமைப்படுத்துதல் போஸ்டர் ஒட்டப்பட்டு வரும் நிலையில், இன்று பிற்பகல் சாலிகிராமத்தில் இருக்கும் விஜயகாந்த் வீட்டுக்கும் நோட்டீஸ் ஒட்ட மாநகராட்சி ஊழியர்கள் சென்றிருந்தனர்.
அப்போது அங்கு இருந்த பணியாளர்கள் நோட்டீஸ் ஒட்ட எதிர்ப்பு தெரிவித்ததால், ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டாமலேயே அங்கிருந்து திரும்பினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், அரசின் அனைத்து விதிகளையும் தேமுதிக மதிக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும் என்றும் நோட்டீஸ் ஒட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என்றும் சிறு அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்றும் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1466 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1466 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1466 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1466 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1467 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1467 Days ago