Skip to main content

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் 3 அடுக்குமாடி சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது!

Sep 24, 2020 262 views Posted By : YarlSri TV
Image

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் 3 அடுக்குமாடி சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது! 

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியிலிருந்த ஜிலானி அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் 4 ஆம் நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 50ற்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் சிக்கி கொண்ட நிலையில் 20ற்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திராகாந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில் அடுக்குமாடி சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டடம் வாழத் தகுதியற்றது என்று பிவாண்டி – நிசாம்பூர் மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் மக்கள் எச்சரிக்கை மீறி வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.



இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில நகர மேம்பாட்டு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை