மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் 3 அடுக்குமாடி சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது!
Sep 24, 2020 262 views Posted By : YarlSri TV
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் 3 அடுக்குமாடி சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது!
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியிலிருந்த ஜிலானி அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் 4 ஆம் நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 50ற்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் சிக்கி கொண்ட நிலையில் 20ற்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திராகாந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அடுக்குமாடி சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டடம் வாழத் தகுதியற்றது என்று பிவாண்டி – நிசாம்பூர் மாநகராட்சி பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் மக்கள் எச்சரிக்கை மீறி வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில நகர மேம்பாட்டு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago