புதிய வைரசால் உண்டாகும் தொற்றுநோய், பல அலைகளாக வந்து தாக்கும் இயல்பு கொண்டது என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அஸ்வினி சவுபே கூறினார்!
Sep 24, 2020 252 views Posted By : YarlSri TV
புதிய வைரசால் உண்டாகும் தொற்றுநோய், பல அலைகளாக வந்து தாக்கும் இயல்பு கொண்டது என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அஸ்வினி சவுபே கூறினார்!
பாராளுமன்ற மக்களவையில், “இந்தியாவில் கொரோனா 2-வது அலை வருமா?” என்று நேற்று கேட்கப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே பதில் அளித்தார். அவர் கூறியதாவது
ஒரு புதிய வைரசால் உண்டாகும் தொற்றுநோய், பல அலைகளாக வந்து மனிதர்களை தாக்கும் இயல்பு கொண்டது. ஒவ்வொரு அலையிலும் ஏராளமானோரை தாக்கும்.
கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகள், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.
எந்த தொற்றுநோயுமே முதலில் உயர்ந்து, உச்சம் பெற்று, பின்னர் படிப்படியாக குறையும். அந்த தொற்று பரவல் சங்கிலியை உடைப்பதற்கு மத்திய அரசு வியூகம் வகுத்து செயல்படுகிறது. இந்தியாவில் சில மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 75 சதவீதம்பேர், 10 மாநிலங்களில்தான் உள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பரவல், கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பதை உணரலாம்.
கொரோனா, சமூக பரவல் நிலையை எட்டி விட்டதா என்பதற்கு இதுதான் எனது பதில். கொரோனா பாதிப்பும், மரணங்களும் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் இருக்கிறது. எனவே, பாதிப்பு அதிகமான இடங்களில், சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்கும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.
மூன்றடுக்கு சுகாதார வசதிகளை உருவாக்குமாறு கூறியுள்ளோம். நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 256 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago