Skip to main content

13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Sep 26, 2020 269 views Posted By : YarlSri TV
Image

13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! 

13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



விழுப்புரம் மாவட்டம் சோழப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பிரியதர்ஷினி. அதேபகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த வாழ்முனி என்பவரின் வாய்பேச முடியாத மகன் சீனிவாசன் சென்னையில் படித்து வந்துள்ளார்.தற்போது கொரோனா தொற்று காரணமாகச் சென்னையிலிருந்து சீனிவாசன் விழுப்புரத்திற்கு வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து பிரியதர்ஷினியை பார்த்த சீனிவாசன் அவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். பின்னர் இந்த நட்பு காதலாக மாற அதைச் சிறுமியிடம் சீனிவாசன் கூறியுள்ளார். ஆனால் சிறுமி சீனிவாசன் காதலுக்கு ‘நோ’ சொன்னதுடன் தனது பெற்றோரிடம் சொல்லி சீனிவாசனை கண்டித்தும் உள்ளார்.



இந்நிலையில் சிறுமி பிரியதர்ஷினி நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அவரின் வீட்டுக்குள் சிறுவன் சீனிவாசன் சென்றுள்ளார். அப்போது சீனிவாசன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமி கூச்சலிடவே, தான் கையில் வைத்திருந்த கத்தரிக்கோலால் பிரியதர்ஷினி கழுத்தில் குத்தி விட்டு சிறுவன் தப்பிச் சென்றுள்ளார்.



சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது சிறுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் ஊரின் ஒதுக்குப்புறத்தில் பதுங்கியிருந்த சீனிவாசனையும் கைது செய்தனர். காதலை ஏற்க மறுத்த சிறுமியைச் சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை