இசை ஜாம்பவான் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது!
Sep 25, 2020 256 views Posted By : YarlSri TV
இசை ஜாம்பவான் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது!
பல்வேறு மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரது மனதிலும் நீங்கா இடம் பிடித்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று பிற்பகல் 1 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். பாடும் நிலா என செல்லமாக அழைக்கப்பட்ட எஸ்.பி.பி, இசை உலகில் நீங்கா வெற்றிடத்தை அளித்துவிட்டு சென்று விட்டார். இனி அவரை எப்போது பார்ப்போம், அவரது இனிமையான குரல் எப்போது கேட்போம், புன்னகை பூத்த அவரது சிரிப்பை எப்போது பார்ப்போம் என எண்ணி ஒவ்வொரு உள்ளங்களும் கனக்கிறது.
மண்ணுலகில் பாடியது போதும் விண்ணுலகில் பாட வா என இறைவன் அவரை அழைத்து சென்று விட்டார் என திரை பிரபலங்களும், இசை உலகில் யாராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அரசியல் தலைவர்களும் எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் எஸ்பிபியின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டு, நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி நம்மை விட்டு மறைந்தாலும், அவரது நினைவலைகள் என்றென்றும் நம்முடன்..
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago