உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” முதல்வர் பழனிசாமி இரங்கல்!
Sep 25, 2020 288 views Posted By : YarlSri TV
உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” முதல்வர் பழனிசாமி இரங்கல்!
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான திரு.எஸ்.பி பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் 1 மணிக்கு உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பேரிழப்பாகவே கருதப்படுகிறது. இனி அந்த குரலை எப்படி கேட்போம், குழந்தைத் தனமான அவரின் சிரிப்பை இனி எப்போது பார்ப்போம் என்றெல்லாம் திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் எஸ்.பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டு மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும் திரைப்பட நடிகரும் எஸ்பிபி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப் படும் திரு.எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
அதில், “தமிழ்நாட்டு மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும் திரைப்பட நடிகரும் எஸ்பிபி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப் படும் திரு.எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த இசை உலகிற்கு இருபதாம் நூற்றாண்டில் இறைவன் அளித்த இனிய நன்கொடையாக வந்து உதித்தவர் மறைந்த திரு. எஸ்பிபி அவர்கள். ஆயிரம் நிலவே வா என்ற புகழ் வாய்ந்த பாடலை அவர் தான் பாட வேண்டும் என்று காத்திருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா திரு எஸ்பிபி அவர்கள். அன்னாரது குரல் நேற்றும் இன்றும் நாளையும் ஒலிக்கும். தங்கத் தாரகையே வருக வருக, தமிழ் மண்ணின் தேவதையே வருக வருக என்ற மாண்புமிகு புரட்சித் தலைவியின் புகழ்பாடும் பாடல் கழகத்தின் வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும்.
திரு.எஸ்பிபி அவர்கள் கடவுள் மீது பக்தி கொண்டு கந்த சஷ்டி கவசம், ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில், போன்ற பல பாடல்களை உள்ளம் உருக பாடி பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
திரு.எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் இனிமைக்கு நிகர் அவரே இவர் மிக அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்து புகழின் உச்சிக்கு சென்றவர் இவர் பாடகர் நடிகர் பின்னணி குரல் இசை அமைப்பாளர் போன்ற பன்முகம் கொண்டவர்.
கலைமாமணி விருது, தேசிய விருது, பல மாநில விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர் திரு எஸ் பி பி. மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் மற்றும் மஸ்ரி விருதுகளை வழங்கி கௌரவித்தது. எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும் திரை ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அன்னாரது நினைவை போற்றிக் கொண்டிருக்கும்.
தனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும் குறிப்பாக தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த திரு.எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு திரைப்படத் துறைக்கும் கலை உலகிற்கும் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரை உலக நண்பர்களுக்கும் ரசிக பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago