பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தற்போது கவலைக்கிடம் பிரார்த்தனை பலனளிக்கவில்லை இயக்குநர் பாரதிராஜா கண்ணீர்!
Sep 25, 2020 234 views Posted By : YarlSri TV
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தற்போது கவலைக்கிடம் பிரார்த்தனை பலனளிக்கவில்லை இயக்குநர் பாரதிராஜா கண்ணீர்!
துக்கத்தில் இருக்கும் போது வார்த்தைகள் வராது என இயக்குநர் பாரதிராஜா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தற்போது கவலைக்கிடமாக உள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் எஸ்பிபி உடல்நிலை குறித்துக் கேட்க திரைப்பிரபலங்கள் பலரும் வருவார்கள் என்று கூறப்படுவதால் அங்குக் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாடகர் எஸ்பிபி சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா வருகை புரிந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா, “சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. உணர்ச்சிவசப்படும் போது வார்த்தைகள் சிக்காது. எஸ்பிபி மிகப்பெரிய பாடகன், உலக மகா கலைஞன் என்பதை விட அவன் என் 50 ஆண்டு கால நண்பன். உலகில் உள்ள எல்லா மக்களும் பிரார்த்தனை செய்ததால் எழுந்து வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. மனிதன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனுக்கு மேலே ஒரு சக்தி உள்ளது . அதன் முடிவுதான் இது.ஆனாலும் எனக்கு இன்னும் ஒரு சின்ன நம்பிக்கை உள்ளது. அவனை மாதிரி ஒரு கலைஞனை இதுவரை பார்த்ததில்லை” என்று கண்ணீர் மல்க கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago