சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!
Sep 21, 2020 309 views Posted By : YarlSri TV
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று 2 முக்கிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. விவாதம் முடிந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்ததுடன், அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை கிழித்து வீசினர்.
மாநிலங்களவையில் அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அவையை நடத்திய துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மனுவும் அளித்தனர்.
இன்று காலை மாநிலங்களவை மீண்டும் கூடியபோது, நேற்று அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 8 உறுப்பினர்களை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்து தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டதும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 உறுப்பினர்கள் உள்பட, எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago