இலங்கை பொலிஸ் துறை வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி வழங்கப்படவுள்ளது!
Sep 21, 2020 290 views Posted By : YarlSri TV
இலங்கை பொலிஸ் துறை வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி வழங்கப்படவுள்ளது!
இலங்கை பொலிஸ் துறை வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய பெண் பொலிஸ் அதிகாரியொருவரை உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு செய்வதற்கு தேசிய பொலிஸ் திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜாசிங்கராச்சி, குறித்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1997இல் பொலிஸ் இன்ஸ்பெக்டராக சேவையில் சேர்ந்த ஜசிங்கரச்சி, பின்னர் 2017 பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார்.
ஒரு பெண் பொலிஸ் அதிகாரியை உப பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிப்பது இதுவே இலங்கையில் முதல் சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago