தியாகி திலீபனின் நினைவாக நடை பயணத்தினை ஏற்பாடு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
Sep 23, 2020 246 views Posted By : YarlSri TV
தியாகி திலீபனின் நினைவாக நடை பயணத்தினை ஏற்பாடு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
தியாகி திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரையிலான நடை பயணத்தினை ஏற்பாடு செய்தவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தியாகி திலீபனின் நினைவாக கடந்த 16ஆம் திகதி வவுனியா நகரசபை பொங்குதமிழ் தூபிக்கு முன்பாகவிருந்து நல்லூர் வரையிலும் நடைபயணம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நடை பயணத்தினை நிறுத்துமாறு அதன் ஏற்பாட்டாளர்களிற்கு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கான தடை உத்தரவினை கோரி வவுனியா பொலிசாரால் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைவாக குறித்த நடை பயணத்திற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் இவ் நடைபயணம் இடம்பெறவில்லை.
இது தொடர்பாக மன்றில் அறிக்கை செய்வதற்காக நடைபயணத்தை ஏற்பாடு செய்த வவுனியா நகரசபை உறுப்பினர் பி.ஜானுயன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கயேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கயேந்திரன் ஆகியோரை எதிர்வரும் 28ஆம் திகதி காலை நீதிமன்றில் ஆஜராகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டளை அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1463 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1463 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago