சாலையில் தூங்கும் மனநலம் பாதித்த பெண்ணை வலுக்கட்டாயமாக தினமும் இரவில் ஆட்டோவில் ஏற்றிச்சென்று பாலியல் வன்கொடுமை!
Sep 22, 2020 269 views Posted By : YarlSri TV
சாலையில் தூங்கும் மனநலம் பாதித்த பெண்ணை வலுக்கட்டாயமாக தினமும் இரவில் ஆட்டோவில் ஏற்றிச்சென்று பாலியல் வன்கொடுமை!
சாலையில் தூங்கும் மனநலம் பாதித்த பெண்ணை வலுக்கட்டாயமாக தினமும் இரவில் ஆட்டோவில் ஏற்றிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகள் தப்பி ஓடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்த மேரி என்ற பெண், மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஹோட்டல் வாசலில் கடந்த 18ம் தேதி அதிகாலை மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
கடையில் வேலை பார்த்த சமையல் மாஸ்டர் கார்த்திக் இதை பார்த்து அருகில் சென்று பார்த்த போது ரத்த கரைகளுடன் துணிகள் ஏதும் இன்றி மயக்கமான நிலையில் மேரி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த ஒரு ஆட்டோவில் 4 பேர் போதை மயக்கத்தில் இருந்துள்ளனர்.
கார்த்திக் அங்கு சென்று அவர்கள் குறித்து விசாரித்தபோது அவர்கள் அங்கிருந்து வேகமாக ஆட்டோவில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இருவரும் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு இந்தப் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மேரியை தூக்கி,மாற்று உடைகளை கொடுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஆயினும் மேரியால் சரியான தகவல்களை கூறமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சியில் 4 பேர் கொண்ட கும்பல் மேரியை இரவு வேளையில் அழைத்து செல்வதும் பின்னர் அதே ஆட்டோவில் கொண்டு வந்து விடுவதும் தெரியவந்தது.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது நண்பர்களான முஸ்தபா, சிவா மற்றும் சுரேஷ் ஆகிய 4 பேரும் தான் மேரியை அழைத்துச் சென்று இறக்கி விடுவது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது . இதன் பின்னர் முஸ்தபா சிவா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆயினும் முக்கிய குற்றவாளியான மணிகண்டன்,சுரேசுடன் சேர்ந்து தலைமறைவாகி விட்டது தலைமறைவாகி விட்ட நிலையில் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago