தொலைபேசியில் 20 நிமிடங்கள் மோடிக்கு மஹிந்தர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்!
Sep 18, 2020 284 views Posted By : YarlSri TV
தொலைபேசியில் 20 நிமிடங்கள் மோடிக்கு மஹிந்தர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் தனது 70ஆவது பிறந்த நாளை நேற்று (17) கொண்டாடியுள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள்,
அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று மாலை 6 மணியளவில் தொலைபேசியூடாக நரேந்திர மோடியைத் தொடர்புகொண்ட இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தனது சார்பிலும் தனது குடும்பம் சார்பிலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவுக்கு நன்றி தெரிவித்த மோடி, மஹிந்தவின் குடும்பத்தில் புதிய வாரிசாகப் பிறந்துள்ள அவரின் மூத்த புதல்வன் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மகனுக்கும் தனது வாழ்த்துக்களையும் மகிழ்வையும் தெரிவித்துள்ளார்.
இதன்போது இரு தலைவர்களும் பரஸ்பரம், நாட்டு நடப்பு மற்றும் கொரோனா வைரஸின் தற்போதைய நிலைவரம் குறித்தும் தமது உரையாடலில் பகிர்ந்து கொண்டனர்.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கூறியுள்ளார்!
-
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்!
-
கறுவா அபிவிருத்திக்கான புதிய திணைக்களத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி...
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago