Skip to main content

4பேருக்கு உடனடியாக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பீடாதிபதி நிமலதாசன் தெரிவித்தார்!

Sep 18, 2020 241 views Posted By : YarlSri TV
Image

4பேருக்கு உடனடியாக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பீடாதிபதி நிமலதாசன் தெரிவித்தார்! 

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இணையவழி பகிடிவதை தொடர்பாக 4பேருக்கு உடனடியாக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பீடாதிபதி நிமலதாசன் தெரிவித்தார்.



இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,



யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இம்சை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் முகாமைத்துவ பீட இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கான உடனடி நடவடிக்கையாக வகுப்புத்தடை விதிக்கப்பட்டு. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



மேலும் இரண்டாம் வருட மாணவர்களின் இம்சைச் செயற்பாடுகளுக்கு உதவியதாக நம்பப்படும் முதலாம் வருட மாணவர்கள் இருவர் இனம்காணப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக இன்று காலை விடுதிகளை விட்டு வெளியேய்றப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான இம்சைப்படுத்தல்களுக்கு உட்படாமல் இருப்பதற்கு மாணவர்களுக்கு தெளிவுட்டல்கள் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.



 இணையவழியில் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க இம்சையாளர்களும் இணையத்தில் தமது இம்சைகளை ஆரம்பித்துள்ளனர் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சற்குனராஜா தெரிவித்தார்.



யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் இடம்பெற்றாக கூறப்படும் இணையவழி பாலியல் ரீதியான பகிடிவதை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,



புதுமுக மாணவர்கள் வரும் போது இம்சைப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன. இவை பல்வேறு பரிமாணங்களில் நடைபெறுகின்றன.



கோவிட்- 19 இடர் நிலைமைகளினால் கற்றல்கள் இணையவழியில் இடம்பெற ஆரம்பித்திருந்தோம். இம்சையாளர்களும் இணையத்தில் தமது இம்சைகளை மேற்கொள்கின்றன.



ஊடகங்களும், பொது மக்கமும் ஒன்றினைந்து பகிடிவதையை வேறறுக்க முடியும்.



இரண்டு நாட்களுக்குள் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு குற்றப் பத்திரத்தை தயாரித்து ஏழு நாட்களுக்குள் இம்சைச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் பதில் வழங்குவதற்கு கால அவகாசம் வழங்கப்படும்.



மாணவர்கள் ஓழுக்காற்று சபை ஒன்றினையும் உருவாக்கியுள்ளதாகவும் இம்சைப்படுத்தல் தொடர்பில் உரிய கவணம் செழுத்தப்படும் எனவும், தெரிவித்தார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை