சீனாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது!
Sep 20, 2020 206 views Posted By : YarlSri TV
சீனாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோ சுகாதார ஆணையத்தின் தகவலின்படி புதிய வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது ‘ப்ரூசெல்லா’ என்ற பாக்டீரியாவை கொண்டு இருக்கும் கால்நடைகளுடனான தொடர்பு காரணமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்றும் வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் மால்டா காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்த நோய் தலைவலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். சிறிது காலம் கழித்து அந்த அறிகுறிகள் குறைந்துவிடும். என்றாலும், சில அறிகுறிகள் நீண்ட நாட்கள் இருக்கக்கூடியதாக மாறக்கூடும்.
இந்த வைரஸ் தாக்கினால் சில உறுப்புகளில் வீக்கம் அல்லது மூட்டுவலி போன்ற நிரந்தர தாக்கம் ஏற்படும். இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவது மிகவும் அரிதானது என்றும் அசுத்தமான உணவை சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது பாக்டீரியாவை சுவாசிப்பதன் மூலமாகவோ தொற்று பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சி.என்.என். தொலைக்காட்சியின் தகவல்படி கடந்த ஆண்டு மத்தியில் லான்ஜோ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் விலங்குகளின் பயன்பாட்டுக்கு ப்ரூசெல்லா தடுப்பூசிகள் தயாரிக்கும் போது ஏற்பட்ட கசிவால் இந்த வைரஸ் பரவல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
கழிவு வாயுவில் இருந்து அனைத்து பாக்டீரியாவும் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
19 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
19 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
19 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
19 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
19 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
19 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago