Skip to main content

எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார் - சரண்

Sep 19, 2020 241 views Posted By : YarlSri TV
Image

எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார் - சரண் 

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்பிபி உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அதே நேரம் மருத்துவர்களும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தது. அதன் எதிரொலியாக எஸ்பிபி தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.



இந்நிலையில் எஸ்.பி.பி. மகன் சரண் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், “எஸ்.பி.பி. விரைந்து குணமடைகிறார். நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார். தொடர்ந்து அவருக்கு மருத்துவக்குழு தீவிர சிசிச்சை அளித்து வருகிறது. எக்மோ, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் எஸ்பிபி உடல்நிலை சீராக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை