கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் திடீரென தீ விபத்து!
Sep 19, 2020 277 views Posted By : YarlSri TV
கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் திடீரென தீ விபத்து!
திருச்சி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பிரதான சந்தையாக விளங்குகிறது காந்தி மார்க்கெட். மொத்த சில்லறை வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டில் தான் காய்கறி வாங்கிச்செல்வர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்த மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, காந்தி மார்க்கெட்டை ஜி.கார்னர் மைதானத்துக்கு மாற்றி ஆட்சியர் உத்தரவிட்டார்.
அப்போதும் மக்கள் கூட்டம் கட்டுக்குள் வரவில்லை என்பதால், ஜி.கார்னரில் அமைக்கப்பட்ட மார்க்கெட்டையும் மூட வேண்டும் எனவும் மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், காந்தி மார்க்கெட்டுக்கு பதில் திருச்சியின் 8 இடங்களில் சிறு வியாபாரிகள் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வருவதால், காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டின் 9 ஆம் நம்பர் கேட் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago