Skip to main content

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி பாஜக மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்கு!

Sep 19, 2020 319 views Posted By : YarlSri TV
Image

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி பாஜக மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்கு! 

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி பாஜக மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது.



பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் சென்னையில் தமிழக பாஜக சார்பில் கட்சியின் தலைவர் எல். முருகன் சென்னை திநகரில் 70 அடிக்கு கேக் வெட்டியதுடன் சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்றார்.



இந்நிலையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி சாரட் வண்டியில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், மாவட்ட தலைவர் சந்துரு உள்ளிட்ட 6 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன்தடையை மீறி திநகர் பகுதியில் பேனர் வைத்ததாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை