Skip to main content

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குக்குப்பட்ட அச்செழு பகுதியில், திராட்சை அறுவடை விழாவில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கலந்துகொண்டார். கொண்டிருந்தார்!

Sep 15, 2020 285 views Posted By : YarlSri TV
Image

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குக்குப்பட்ட அச்செழு பகுதியில், திராட்சை அறுவடை விழாவில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கலந்துகொண்டார். கொண்டிருந்தார்! 

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட குழுவினர்,  இன்றையதினம் வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.



வடக்கு மாகாணத்தில் இருக்கும்  விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவே அமைச்சர் இவ்வாறு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.



அந்தவகையில் யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்செழு பகுதியில் இன்று காலை திராட்சை அறுவடை விழாவில் கலந்து கொண்டிருந்தார்.



அத்தோடு நெற் பயிர் செய்கையினையின் அமைச்சர் ஏர் உழுது, நெல் விதைத்து ஆரம்பித்து வைத்திருந்தார்.



குறித்த விஜயத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சஷீந்திர ராஜபக்‌ஷ, டி.பி. ஹேரத் மற்றும் மொஹான் டி சில்வா, 



நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும்,  



யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை