Skip to main content

புதுச்சேரியில் இருக்கும் அண்ணா சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்!

Sep 15, 2020 260 views Posted By : YarlSri TV
Image

புதுச்சேரியில் இருக்கும் அண்ணா சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்! 

புதுச்சேரியில் இருக்கும் அண்ணா சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



கடந்த 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய அண்ணாதுரை அவர்கள், 1967 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வரான பிறகு பல்வேறு சட்டத்திருத்தங்களை மேற்கொண்டார். தமிழகத்தில் இருமொழி கொள்கை, தமிழ்நாடு என பெயர் மாற்றியது , சுயமரியாதை திருமண சட்டம் என பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு வித்திட்டவர் இவரே. தமிழகமே போற்றும் அண்ணாவின் 112 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.



அதனையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் அண்ணா படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமியும் மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருக்கும் அண்ணா திருஉருவ சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் உடன் சென்றிருந்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை