Skip to main content

நாடு ஒன்றுபட்டு நிற்கும் செய்தியை பாராளுமன்றம் உறுதி செய்யும் - பிரதமர் மோடி

Sep 15, 2020 250 views Posted By : YarlSri TV
Image

நாடு ஒன்றுபட்டு நிற்கும் செய்தியை பாராளுமன்றம் உறுதி செய்யும் - பிரதமர் மோடி 

லடாக் எல்லையில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனாவை, மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.



மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஆனால் லடாக் மோதல் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். பாராளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது லடாக் மோதல் குறித்து அவர் கூறியதாவது:-



லடாக்கில் விரைவில் பனிக்காலம் தொடங்க இருக்கும் நிலையில், அந்த மலைப்பாங்கான பகுதிகளில் நமது வீரர்கள் மிகுந்த தீரத்துடன் தங்கள் கடமைகளை செய்து வருகின்றனர்.



இந்த பாராளுமன்றத்துக்கும், குறிப்பாக இந்த கூட்டத்தொடருக்கும் ஒரு சிறப்பு கடமை உள்ளது. அதாவது, நமது வீரம் செறிந்த வீரர்களுக்கு பின்னால் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கும் சேதியை நாடாளுமன்றமும், ஒவ்வொரு உறுப்பினரும், ஒரே குரலாக, ஒரே உணர்வுடன், ஒரே உறுதிப்பாட்டுடன் வலிமையாக வெளிப்படுத்த வேண்டும்.



இந்த செய்தியை பாராளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள் வழியாக நாடு தெரிவிக்கிறது. நமது வீரர்களுக்கு பின்னால் நாடாளுமன்றம் இருக்கிறது என்ற இந்த வலிமையான செய்தியை நாடாளுமன்றம் ஒரே குரலில் உறுதியாக தெரிவிக்கும் என நான் நம்புகிறேன்.



நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், சிறப்பான சூழலில் இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் எம்.பி.க்கள் தங்கள் கடமையை சிறப்பாக மேற்கொள்வார்கள். பாராளுமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், இரு அவைகளுக்கான நேரம் மற்றும் வார இறுதி நாட்களில்கூட பாராளுமன்றத்தை நடத்துவது உள்ளிட்ட முடிவுகளை எம்.பி.க்கள் வரவேற்றுள்ளனர்.



கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் பின்பற்றுவார்கள். தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை எந்த வித அலட்சியமும் கூடாது.



இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை