நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான நடிகை சஞ்சனா கல்ராணி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்!
Sep 17, 2020 234 views Posted By : YarlSri TV
நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான நடிகை சஞ்சனா கல்ராணி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்!
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த பலரும் வருகின்றனர். நடிகை ராகினி திவேதி கைதான நிலையில் கர்நாடகாவில் போதைப்பொருள் விவகாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் கடந்த 8 ஆம் தேதி போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.நீதிமன்ற அனுமதியை பெற்று சஞ்சனா கல்ராணி வீட்டில் போதை பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சோதனை செய்தனர். பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனாவிடம் 9 நாட்கள் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் சஞ்சனாவிடம் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை சஞ்சனாவுக்கு நீதிபதி 2 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago