Skip to main content

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் சபாநாயகர்- கரு ஜயசூரிய

Sep 16, 2020 264 views Posted By : YarlSri TV
Image

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் சபாநாயகர்- கரு ஜயசூரிய 

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரம் காண்பிப்பதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.



இந்த விடயம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



குறித்த பதிவில், “முன்மொழியப்பட்ட வெள்ளைக் காகிதமாக உள்ள அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.



20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள அவசரப்படுவதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை.



நாடொன்று சமத்துவம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை நோக்கிப் பயணப்படுவதை உறுதிசெய்வதற்கு ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மிகவும் அவசியமானவையாகும்” என பதிவிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை