Skip to main content

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கையை சேர்ந்த தம்பதியர் சிக்கினர்!

Sep 11, 2020 221 views Posted By : YarlSri TV
Image

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கையை சேர்ந்த தம்பதியர் சிக்கினர்! 

சென்னை அண்ணாநகர் மேற்கு அன்பு காலனியில் வசித்து வரும் தனியார் காப்பீடு நிறுவன ஊழியர் தாஜூதீன் (வயது 55), அவரது மனைவி ஆஷா (60) ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் இந்திய அரசின் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்பட அரசு அங்கீகார அட்டைகள் பெற்று இருப்பதாகவும் மத்திய உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதுதொடர்பாக தமிழக ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் 2 பேரிடம் ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.



விசாரணையில், ‘தாஜூதீனும், ஆஷாவும் இலங்கை நாட்டில் இருந்து கடந்த 1987-ம் ஆண்டு தமிழகம் வந்து, நெல்லை மாவட்டத்தில் தங்கி இருந்ததும், பின்னர் 1998-ம் ஆண்டு அவர்கள் சென்னையில் குடியேறியதும், தற்போது அவர்களுடைய மகன் ஜூலியன் (33) பெங்களூருவில் இருப்பதும் தெரிய வந்தது.



இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் என அரசு அங்கீகார அட்டைகளை பெற்று சட்டவிரோதமாக தங்கி இருந்ததும் கண்டறியப்பட்டது.



பின்னர் ‘கியூ’ பிரிவு போலீசார் அவர்கள் 2 பேரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் இலங்கை தம்பதியிடம் தனியாக விசாரணை நடத்தினர்.



போலி ஆவணங்கள் தயாரித்தது எப்படி? இதற்கு யார் உடந்தையாக இருந்தார்கள்? என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் தாஜூதீன் கைது செய்யப்பட்டார். அவருடைய மனைவி ஆஷாவை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது வரவேண்டும் என்று சொல்லி போலீசார் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை