Skip to main content

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்ட போராட்டம் நடத்தி நீட் தேர்வை நீக்கும் - உதயநிதி ஸ்டாலின்

Sep 14, 2020 226 views Posted By : YarlSri TV
Image

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்ட போராட்டம் நடத்தி நீட் தேர்வை நீக்கும் - உதயநிதி ஸ்டாலின்  

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்ட போராட்டம் நடத்தி நீட் தேர்வை நீக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



மருத்துவ நுழைவு தேர்வான நீட் நேற்று நாடு முழுவதும் எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியில் நடந்து முடிந்தது.



நேற்று நடந்த நீட் தேர்வில் விண்ணப்பித்த மாணவர்களில் 90% பேர் தேர்வு எழுதியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதே சமயம் தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் மூன்று பேரின் தற்கொலை ஒரே நாளில் அரங்கேறியது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.



இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்செங்கோட்டில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்  மோதிலால் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் திமுக சார்பில் ரூ.5 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு கொடுமையால் இதுவரை தமிழகத்தில் 11 மாணவர்கள் பலியாகியுள்ளனர். திமுக ஆட்சி வந்தால் சட்ட போராட்டம் நடத்தி, எப்பாடு பட்டாவது நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை