Skip to main content

மாணவர்களின் நலனில் அக்கறைகொண்ட மாண்புமிகு அம்மாவின்அரசு என்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்!

Sep 13, 2020 218 views Posted By : YarlSri TV
Image

மாணவர்களின் நலனில் அக்கறைகொண்ட மாண்புமிகு அம்மாவின்அரசு என்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்! 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைகான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது. ஆனால் நேற்று இந்த நீட் தேர்வுக்கு அஞ்சி தமிழகத்தில் மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தருமபுரியை சேர்ந்த ஆதித்யா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் என ஒரே நாளில் 3 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர்.



இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், “நீட் வேண்டாம் என்பதே தமிழகஅரசின் நிலைப்பாடு; மாணவர்களின் நலனில் அக்கறைகொண்ட மாண்புமிகு அம்மாவின்அரசு என்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.



மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தயைகூர்ந்து தவறான விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை