முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் மூச்சுத் திணறல் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்!
Sep 13, 2020 221 views Posted By : YarlSri TV
முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் மூச்சுத் திணறல் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்!
முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் மூச்சுத் திணறல் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரான ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் மனைவி சமீபத்தில் இறந்த பின்பு, அவர் தமது இரண்டு மகன்களுடன் பாட்னாவில் வசித்து வந்தார்.
இதனிடையே வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பாட்னாவிற்கு எடுத்துவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.
74 வயதான ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரகுவன்ஷ் பிரசாத் சிங் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டு பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago