உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
Sep 13, 2020 268 views Posted By : YarlSri TV
உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதலமைச்சர். 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (13.9.2020) வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் (ம) அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் சிறுவன் லிங்கேஷ் என்பவர் விளையாடிக்கொண்டிருந்த போது, அருகிலிருந்த மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்:
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், மாகரல் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டன் என்பவரின் மனைவி திருமதி ரேவதி என்பவர் எதிர்பாராத விதமாக மின்கம்பி பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் ராஜேந்திரன் என்பவர் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திண்டிவனம் வட்டம், தழுதாளி கிராமத்தைச் சேர்ந்த திருமதி அனித்தா என்பவரின் கணவர் நாமதேவன் என்பவர் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
செஞ்சி வட்டம், முல்லை நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் தங்கமணி என்பவர் மின் கம்பம் உடைந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், மேல்நகர் மதுரா தேவாங்குபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி தேவி என்பவரின் கணவர் ராஜேஷ் என்பவர் பட்டுப்பூச்சி வளர்ப்பு குடோனில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், மாடம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி சுஜாதா என்பவரின் கணவர் கண்ணாயிரம் என்பவர் மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மன்னார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த திருமதி முத்துலெட்சுமி என்பவரின் கணவர் சண்முகசுந்தரம் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
தென்காசி மாவட்டம், கருவந்தா கிராமத்தைச் சேர்ந்த திருமதி ரம்யா என்பவரின் கணவர் கிருஷ்ணபெருமாள் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த திருமதி சாரதா என்பவரின் கணவர் எட்வின் சுரேஷ் என்பவர் மின்கம்பத்தில் ஏறிய போது தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி பஞ்சு என்பவரின் மகன் செல்வன் மகுடேஸ்வரன் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரின் மகன் அழகு கருப்பசாமி என்பவர் வீட்டின் அருகே எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டம், மூக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் கணேசன் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியின் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கள்ளிகுளம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி செல்வகனி என்பவரின் மகன் திரு. வினோத்ராஜா என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
சென்னை மாவட்டம், மாம்பலம் வட்டம், அசோக் நகரைச் சேர்ந்த சீதாராமன் என்பவரின் மகன் செல்வன் ஹரிஹரன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
பாம்பு கடித்தும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago