மதுரையில் உள்ள நீட் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டு பதாகைகளில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே?
Sep 13, 2020 294 views Posted By : YarlSri TV
மதுரையில் உள்ள நீட் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டு பதாகைகளில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே?
மதுரையில் உள்ள நீட் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டு பதாகைகளில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் தமிழில் வழிகாட்டுப் பதாகைகள் அமைக்கப்படாதது தமிழ் ஆர்வலர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. மத்திய அரசு இந்தியை திணிப்பதாக எதிராக ஏற்கனவே திமுக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதுவதால் 3,842 மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த மையங்களில் கொரோனா கால பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் தேர்வு நெறிமுறைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும்படி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மதுரையில் உள்ள நீட் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டு பதாகைகளில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
சங்கம் வைத்தும் தமிழ் வளர்த்த மண் மதுரை. இப்படி பல பெருமைகள் உடைய மதுரையில் தமிழ் மொழியில் வழிகாட்டுப் பதாகைகள் அமைக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு தேர்வு எழுத செல்பவர்களுக்கு ஆங்கிலம் புரியும் என்றாலும் கூட தமிழகத்தில் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதும் மையத்தில் இந்தி மொழிக்கு என்ன வேலை என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் நீட் தேர்வு மையத்தில் இந்தி மொழியில் வழிகாட்டுப் பதாகை நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தமிழ் புறக்கணிப்பட்டது தமிழ் ஆர்வலர்களை வேதனை அடைய வைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் இதனிடையே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலை முதலே தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு அரசியல் இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தி வருகின்றனர்.
தேர்வு மையங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்புவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்வு மையங்கள் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago