வயிற்றில் ஈரத்துணி அணிந்து தொழிலாளர்கள் நூதன போராட்டம்!
Sep 13, 2020 315 views Posted By : YarlSri TV
வயிற்றில் ஈரத்துணி அணிந்து தொழிலாளர்கள் நூதன போராட்டம்!
புதுச்சேரி அரசின் வேளாண் நிறுவனங்களான பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் முறைகேடு, நிர்வாக திறமையின்மை காரணமாக நாளடைவில் நலிவுற்று வந்தது.
இதனை ஆட்சியாளர்கள் சரிசெய்யாமல் இந்நிறுவனத்தை முடக்கி, செயல்படாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் அங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதால் அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள்.
இவ்விகாரத்தில் அரசின் போக்கை கண்டித்தும், இந்நிறுவனங்களை திறந்து நடத்த வலியுறுத்தியும், நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் கடந்த 10ம் தேதி முதல் சட்டமன்றம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். பிரச்னைகளைத் தீர்க்கும் வரை ஏஐடியுசி போராட்டம் நடத்தும் என தெரிவித்துள்ளது.
3வது நாளான இன்று தொழிலாளர்களின் பொருளாதாரம் பாதித்து குடும்பம் பட்டினியில் வாடுவதைச் சுட்டிகாட்டும் வகையில் வயிற்றில் ஈரத்துணி அணிந்து நூதனப் போராட்டம் நடந்தது. தினமும் இப்போராட்டம் புதுபுது வடிவம் பெறும் என ஏஐடியுசி பொதுச்செயலாளர் சேது செல்வம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago