கிம் ஜாங் உன்-ஐ குறைத்து மதிப்பிட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்!
Sep 11, 2020 426 views Posted By : YarlSri TV
கிம் ஜாங் உன்-ஐ குறைத்து மதிப்பிட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ குறைத்து மதிப்பிட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் அமெரிக்காவிற்கே அச்சுறுத்தல் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடாக வடகொரியா உள்ளது. அந்நாட்டில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஏவுகணை சோதனைகள் பரபரப்பு செய்தியாவது வழக்கம்.
உலக அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள அமெரிக்காவும் வடகொரியாவும் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகவும், அவரது சகோதரி கிம் யோ ஜாங்கிடம் அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் முன்னாள் உதவியாளர் சாங் சாங்-மின் வெளியிட்ட அந்த செய்திக்குறிப்பை மறுக்கும் விதமாக வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் அதன் தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட புதிய படங்களை வட கொரிய அரசு ஊடகங்கள் வெளியிட்டன.
இந்நிலையில் வியாழக்கிழமை தனது சுட்டுரைப் பதிவில் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், “ கிம் ஜாங் உன் நலமாக உள்ளார். அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம்.” எனப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்தப் பதிவு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர் வுட்வேர்ட் என்பவர் எழுதியுள்ள 'ரேஜ்' என்ற புத்தகத்தில் வடகொரிய அதிபர் கிம் தனது சொந்த மாமாவை எப்படி கொலை செய்தார் என்பது பற்றி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார் எனப் பதிவு செய்துள்ள நிலையில் இந்த சுட்டுரைப் பதிவை டிரம்ப் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
24 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
24 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
24 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
24 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
24 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
24 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago