பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை - போரிஸ் ஜான்ஸன்
Sep 10, 2020 263 views Posted By : YarlSri TV
பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை - போரிஸ் ஜான்ஸன்
பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் 6 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்க அந்த நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டமிட்டுள்ளார். கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் கணிசமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாம் உடனடியாக செயல்பட்டாக வேண்டும். எனவே, சமூகத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை நாம் எளிமையாக்கவும், வலிமைப்படுத்தவும் வேண்டும்.
கரோனா தடுப்புக்கான சட்டதிட்டங்களை பொதுமக்கள் புரிந்து கொள்வதும், அவற்றைப் பின்பற்றி நடப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். கைகளைக் கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கரோனா அறிகுறிகள் இருந்தால் உரிய பரிசோதனை செய்து கொள்தல் ஆகியவற்றை பொதுமக்கள் தவறாமல் செய்ய வேண்டும் என்றார் அவர்.
நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனில் 6 பேருக்கு மேல் குழுமக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், தற்போது 30 பேருக்கு மேல் கூடுவோர் மீது நடவடிக்கை எடுக்கத்தான் போலீஸôருக்கு அதிகாரம் உள்ளது. புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், 6 பேருக்கு மேல் கூடினால் கூட அவர்கள் மீது போலீஸôரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago