Skip to main content

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Sep 05, 2020 306 views Posted By : YarlSri TV
Image

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.



இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,77,701 ஆக அதிகரித்துள்ளது. 



மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 58 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 3,510 ஆக அதிகரித்துள்ளது. 



மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 3,248 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,50,801 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 23,390 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை