18 மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி!
Sep 07, 2020 273 views Posted By : YarlSri TV
18 மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி!
தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக நேரில் சென்று ஆய்வு செய்து, கொரோனா தடுப்பு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார். கலெக்டர்களுடன் ஆலோசனை செய்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்கிறார். இதுவரை 18 மாவட்டங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார்.
இந்த நிலையில், 19-வது மாவட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) செல்கிறார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
அதனை தொடர்ந்து மகளிர் சுயஉதவி குழுக்கள், தொழில் முனைவோர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.
அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வைத்து, பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார். இதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை குறித்தும், ஆய்வு கூட்டம் குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆலோசனை நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தை தொடர்ந்து, 11-ந் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago